ERAVUR
Eravur ஏறாவூர்வெப் இற்கு அன்புடன் வரவேற்கின்றோம். இவ் இணையதளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து தாங்களும் எங்களுடன் இணைந்து இவ் இணையதளத்தில் செய்திகள் மற்றும் ஆக்கங்களைப் பிரசுரித்து பிற உள்ளங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். - WWW.ERAVURWEB.TK

Join the forum, it's quick and easy

ERAVUR
Eravur ஏறாவூர்வெப் இற்கு அன்புடன் வரவேற்கின்றோம். இவ் இணையதளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து தாங்களும் எங்களுடன் இணைந்து இவ் இணையதளத்தில் செய்திகள் மற்றும் ஆக்கங்களைப் பிரசுரித்து பிற உள்ளங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். - WWW.ERAVURWEB.TK
ERAVUR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வைரஸ் பாதித்த Pendrive-ல் இருந்து தகவல்களை மீள்பெறுவதற்கு
by Admin Tue Aug 13, 2013 9:53 am

» கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க…
by Admin Thu Mar 07, 2013 2:32 pm

» Automatic Restart Settin (Timing)
by Admin Thu Feb 28, 2013 1:45 pm

» www.evrtj.webs.com (Live Telecast)
by Admin Fri Dec 07, 2012 10:57 am

» அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.
by Admin Wed Nov 07, 2012 6:03 pm

» Islamic Books (quran,Hadhees) In Various Languages, for free to download....
by umairahmadh Sun Oct 21, 2012 12:19 pm

» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? (தொடர் 03,04)
by umairahmadh Thu Oct 11, 2012 8:46 pm

» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? -2
by umairahmadh Thu Oct 11, 2012 8:45 pm

» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? -1
by umairahmadh Thu Oct 11, 2012 8:44 pm

» விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள்!
by Admin Tue Oct 09, 2012 1:26 pm

» கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.
by Admin Tue Oct 09, 2012 12:01 pm

» ஹேனியா!!!! எனும் குடலிறக்கம்
by umairahmadh Mon Oct 08, 2012 3:14 pm

» DR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன? ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)
by umairahmadh Mon Oct 08, 2012 2:57 pm

» கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்
by Admin Sun Sep 30, 2012 8:52 pm

» ஏறாவூர் பேரணி...
by Admin Wed Sep 26, 2012 10:00 am

» ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!
by Admin Thu Sep 13, 2012 9:51 am

» இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
by Admin Wed Sep 12, 2012 5:52 pm

» Did u know how u born?
by Admin Wed Aug 29, 2012 2:27 pm

» Very Excellency
by Admin Fri May 25, 2012 10:18 am

» டுபாய் பெண்களின் புரட்சி...!
by Admin Fri May 25, 2012 9:42 am

» பொன்சேகாவை விடுவிக்க அரசாங்கம் அவசரப்பட்டது ஏன்?.
by Admin Tue May 22, 2012 5:39 pm

» குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கா? உப்புக் கரைசல் கொடுங்க
by Admin Tue May 22, 2012 3:11 pm

» குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?
by Admin Tue May 22, 2012 3:09 pm

» மாதவிடாய் பிரச்சினையா? மனதை தளரவிடாதீர்கள் !
by Admin Tue May 22, 2012 3:01 pm

» வரதட்சணை பற்றி இஸ்லாம்
by Admin Mon May 14, 2012 11:11 am

» கொழுப்பை குறைக்கும் வெள்ளைப்பூண்டு
by Admin Fri May 04, 2012 10:32 am

» தம்புள்ளை சம்பவத்தால் கொழும்பு மாநகரசபை கூட்டத்தில் அமளிதுமளி
by Admin Sat Apr 28, 2012 10:30 am

» இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்..? காத்திருக்கும் ஆபத்துக்கள்..!!
by Admin Fri Apr 27, 2012 10:24 am

» ஈமானிய உள்ளங்களே - தம்புள்ள இறையில்ல மீட்பின் அவசியம்..!
by Admin Thu Apr 26, 2012 10:02 am

» தம்புள்ள பள்ளிவாயல் உடைப்பு பற்றி அமைச்சர் ஹக்கீம்
by munas Tue Apr 24, 2012 12:16 am

» Dambulla Mosque Problem
by Admin Mon Apr 23, 2012 2:54 pm

» இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவமிக்க தினம்
by Admin Mon Apr 23, 2012 10:01 am

» 3 வகையான வின்டோஸ் 8 தொடர்பாக மைக்ரோசொப்ற் அறிவித்தது
by Admin Thu Apr 19, 2012 10:10 am

» கட்டாரில் வாழும் இலங்கை முஸ்லிம்களை அமைச்சர் ஹக்கீம் சந்திக்கவுள்ளார்
by Admin Wed Apr 18, 2012 9:39 am

» கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்
by munas Fri Apr 13, 2012 12:15 am

» லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்
by munas Thu Apr 12, 2012 1:10 am

» என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்
by munas Thu Apr 12, 2012 1:08 am

» குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா? இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்
by munas Thu Apr 12, 2012 1:07 am

» சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!
by munas Thu Apr 12, 2012 1:05 am

» அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!!
by munas Thu Apr 12, 2012 1:04 am

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 668 on Thu Aug 12, 2021 3:21 am
Google
www.evrtj.webs.com (Live Telecast)

Fri Dec 07, 2012 10:57 am by Admin

இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகை முதல் ஏறாவூர் ஜாமிஅதுல் கைரிய்யா பெண்கள் அறபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்வு ஏறாவூர் தவ்ஹீத் ஜூம்ஆ …

[ Full reading ]

Comments: 0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.

Wed Nov 07, 2012 6:03 pm by Admin

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள். நமது அரசியல் வாதிகள்




Comments: 0

விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள்!

Tue Oct 09, 2012 1:26 pm by Admin



Comments: 0

கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.

Tue Oct 09, 2012 12:01 pm by Admin

NEAR DEATH & CLOSE CALL - The ultimative Collection (NEW 2012 Videoclip) BEST O

கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.






[ Full reading ]

Comments: 0

DR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன? ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)

Tue Sep 25, 2012 3:34 pm by Admin

I.C.C யின் போலித்தனத்தை துகிலுரிக்கும் பலஸ்தீன நெருக்கடி Zakir10

நேற்று முன்தினம் மாலை மல்வானையில் இடம்பெற்ற டொக்டர் ஸாக்கிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சார நிகழ்வு இறுதியில் இடையூறு …

[ Full reading ]

Comments: 3

கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்

Sun Sep 30, 2012 8:52 pm by Admin

dயானா-கேட் வில்லியம்ஸ் ஓர் வரலாற்றுப் பார்வை

மேற்கத்தைய நாகரிகத்தால் இங்கிலாந்து அரச பரம்பரையிலும் கலாச்சார மாற்றங்கள் அன்று ஏற்பட்டன. அது …

[ Full reading ]

Comments: 0

ஏறாவூர் பேரணி...

Wed Sep 26, 2012 10:00 am by Admin

ஏறாவூரின் வரலாற்றில் மாபெரும் ஆர்ப்பாட்டம் றசூலுல்லாஹ்வை இழிவுபடுத்தும் திரைப்படத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம். மற்றும் எதிர்ப்புப் பேரணி



[ Full reading ]

Comments: 0

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!

Thu Sep 13, 2012 9:51 am by Admin

I.C.C யின் போலித்தனத்தை துகிலுரிக்கும் பலஸ்தீன நெருக்கடி 400820_367047143370658_2034129488_n

உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை …

[ Full reading ]

Comments: 0

இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

Wed Sep 12, 2012 5:52 pm by Admin

இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபி (ஸல்) அவர்களையும் மோசமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து …

[ Full reading ]

Comments: 0


I.C.C யின் போலித்தனத்தை துகிலுரிக்கும் பலஸ்தீன நெருக்கடி

Go down

I.C.C யின் போலித்தனத்தை துகிலுரிக்கும் பலஸ்தீன நெருக்கடி Empty I.C.C யின் போலித்தனத்தை துகிலுரிக்கும் பலஸ்தீன நெருக்கடி

Post by Admin Tue Apr 10, 2012 10:03 am

I.C.C யின் போலித்தனத்தை துகிலுரிக்கும் பலஸ்தீன நெருக்கடி Palest10

ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விவஸ்தை கிடையாது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்டு எல்லாக் கதவுகளையும் தட்டுவது அந்த சமூகங்களின் பழக்கமாக மாறியிருக்கிறது. எந்தக் கதவு திறக்கும், எந்தக் கதவின் ஊடாக சென்றால் நீதி கிட்டும், எந்தக் கதவைத் தட்டினால் தாம் விரட்டி அடிக்கப்படுவோம் என்றெல்லாம் தர்க்க ரீதியாக ஆராயும் பக்குவத்தை அவை இழந்திருக்கின்றன.

ஒடுக்கப்பட்ட சமூகமொன்றை எடுத்துக் கொள்வோமே. அந்தச் சமூகம் தவறான கதவைத் தட்டி மூக்கு உடைப்பட்டு நிற்கிறது என்போம். அந்த சமூகத்தின் கசப்பான அனுபவங்களைப் புரிந்து கொள்ள மற்றைய சமூகம் தவறி விடுகிறது. முதல் சமூகம் தட்டிய கதவையே இரண்டாம் சமூகமும் தட்டி மூக்குடைபட்டு நிற்பது சமகால அரசியல் உலகின் யதார்த்தமாக மாறியிருக்கிறது.

இன்று மனித குல மாண்புகள் சீர்குலைந்துள்ள யுகத்தில் வாழ்கிறோம். உலக சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய கோட்பாடுகள் மதிக்கப்படுவதில்லை. தார்மீக விழுமியங்களும் கட்டிக்காக்கப்படுவதில்லை. அரசியல் நோக்கங்களுடன் தேசங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சுயநலம் கருதிய பொருளாதார நோக்கங்களால் சமூகங்கள் ஒடுக்கப்படுகின்றன. உயிர்கள் பலிகொள்ளப்படுகின்றன. மனிதர்கள் அடக்கியாளப்படுகிறார்கள். அடைத்து வைக்கப்படுகிறார்கள், இம்சைப்படுத்தப்படுகிறார்கள். ஒரு சாரார் மறுசாராரை வெறுத்து ஒதுக்குகிறார்கள். நிந்தனை செய்கிறார்கள். அடிமைகளாக நடத்துகிறார்கள்.

உலகில் ஒரு சமூகம் சகல வசதிகளையும் அனுபவிக்கும்போது, மற்றுமொரு சமூகம் அத்தியாவசிய தேவைகளையேனும் நிறைவேற்ற முடியாது அல்லல்படுகிறது. உலகின் மேற்கு மூலையில் இருந்து கிழக்கு மூலை வரை எங்கும் ஏற்றத்தாழ்வுகள். நலிந்தவர்கள் மீதான சுரண்டல்கள். அதிகாரம் படைத்த தரப்புக்கள் கட்டவிழ்த்து விடும் கொடுமைகள். இந்தக் கொடுமைகளுக்கு இன்று இனச் சுத்திகப்பு, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் என்ற ரீதியில் புதிய வரைவிலக்கணங்கள் மொழியப்படுவதையும் பார்க்கிறோம்.

இந்த மாதியான கொடுமைகளால் யார் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அவர்கள் ஐக்கிய நாடுகள் என்ற அனைத்துலக அமைப்பின் கதவைத் தட்டுவது வழக்கம். ஐ.நா. என்ற மாபெரும் அமைப்பில் பல்வேறு பஞ்சாயத்துக்கள் இருப்பதால், அவற்றில் ஏதோவொரு பஞ்சாயத்து தமது ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கக்கூடும் என்ற அவா அவர்களுக்கு உண்டு.

இவர்களில் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நடத்திய அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஆப்கானிஸ்தானிலும் லிபியாவிலும் நேட்டோ கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆபிரிக்க ஆயுத நெருக்கடிகளில் சிக்கி உறவுகளையும், உடமைகளையும் உறுப்புகளையும் இழந்தவர்கள் என்ற ரீதியில் சகல தரப்பினரும் உள்ளனர். பலஸ்தீனர்களையும், இலங்கையர்களையும் மறக்க முடியாது.

ஆயுத மோதல்களின் அதீத கொடுமைகளால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த சகல தரப்புக்களும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சீ.சீ.) என்ற பஞ்சாயத்தை நாடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதன் மூலமே தமக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்புவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர், ஒவ்வொருவரும் இன, மத, குல, பால் ரீதியாக ஒதுக்கப்படாமல் கௌரவமான பிரஜையாக, தனக்கு உரித்தான சுதந்திரங்களுடன் சிறப்பாக வாழ்வதை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான பஞ்சாயத்து என்ற எண்ணம் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.

ஆனால், ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளின் கைப்பாவையாக மாறியிருக்கும் ஐக்கிய நாடுகள் என்ற கட்டமைப்பில், மேற்குலக சமூகம் ஐ.சீ.சீ. வழக்காடு மன்றத்திலுள்ள நீதி தேவதையின் தராசுத் தட்டுக்களை கண்ணுக்குத் தெரியாத நூலால் மிகவும் சூசகமான முறையில் தமது பக்கம் தாழச் செய்வதால், நீதி கேட்டுச் செல்வோர் வழக்காடு மன்றத்தில் அநாதரவாக நிற்கிறார்கள். அந்த வழக்காடு மன்றத்தில் நீதி பெறுவதற்காக வசையில் காத்திருப்பவர்கள் பலர். அவர்கள் யாவரும் பலஸ்தீனர்களுக்கு நேர்ந்த கதியை அறிவது அவசியம். பலஸ்தீனர்கள் ஆண்டாண்டு காலமாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள். தம்மீதான அப்பட்டமான அத்துமீறல்களுக்கு நீதிபெற முடியாதவர்களாக இருப்பவர்கள். அவர்களது கதி மற்றைய நாடுகளுக்கு சிறந்த உதாரணமாகும்.

சில வருடங்களுக்கு முன்னர், காஸா நிலப்பரப்பின் மீது இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பில் பலஸ்தீனர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் ஏராளம். இந்தக் கொடுமைகளுக்காக நீதி கேட்டு ஐ.சீ.சீ.யை நாடியபோது, இது பற்றி முறைப்பாடு செய்யும் அருகதை பலஸ்தீனர்களுக்கு இல்லையென அந்தப் பஞ்சாயத்தின் தலைவர் அறிவித்திருக்கிறார்.

ஒரு தரப்பிற்கு எதிராக இன்னொரு தரப்பு ஐ.சீ.சீ.யில் முறைப்பாடு செய்ய வேண்டுமென்றால், அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. அந்த வரைமுறைகளை பலஸ்தீனம் பூர்த்தி செய்யவில்லை என்பதால், பலஸ்தீனத்தின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐ.சீ.சீ.யின் பிரதம வழக்குரைஞர் மனோ ஒக்காம்போ குறிப்பிட்டிருக்கிறார்.

பலஸ்தீனம் என்பது ஒரு நாடு அல்ல என்பது ஒக்காம்போவின் வாதம். ஐக்கிய நாடுகள் சபையோ, பாதுகாப்புச் சபையோ பலஸ்தீனத்தை ஒரு தேசமாக அங்கீகத்தால் மாத்திரமே, பலஸ்தீனர்களின் கோரிக்கையை ஏற்று விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமென்ற ரீதியில் ஐ.சீ.சீ.யின் பிரதம வழக்குரைஞர் விளக்கம் அளித்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் காஸா நிலப்பரப்பை ஆக்கிரமித்து சுமார் மூன்று வார காலம் நடத்திய சண்டையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் பலியானதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால், புள்ளிவிபரங்களால் சொல்ல முடியாத கதைகள் ஏராளம். அவற்றின் மூலம் விபரிக்க முடியாத அவலங்கள் எண்ணற்றவை.

இஸ்ரேலியப் படைகளின் குண்டு வீச்சில் பச்சிளம் பாலகர்களின் உடல்கள் சிதைந்து கிடக்கும் விதத்தை புகைப்படங்கள் ஊடாக உலகம் கண்டது. முழந்தாளிடப்பட்ட பலஸ்தீன பிரஜைகளை இஸ்ரேலியப் படைகள் தொடு தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சிகளை ஊடகங்கள் விபரித்தன. வெள்ளைப் பொஸ்பரஸ் முதலான நச்சுப் பதார்த்தங்கள் மூமலம் விளைந்த பாதிப்புகளை செய்தியாளர்கள் விபரித்தார்கள்.

கொடுமைகளைப் புரிந்த தரப்பும் உண்டு. கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தரப்பும் இருக்கிறது. குற்றத்தை நிரூபிக்கக்கூடிய சாட்சியங்களும் எண்ணற்றவை. கொடுமைகளைப் புரிந்த தரப்பு பஞ்சாயத்தின் தீர்ப்புகளை அங்கீகரிக்க மாட்டாது. பாதிக்கப்பட்ட தரப்பு பஞ்சாயத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

இத்தகைய பின்னணியில், பஞ்சாயத்து பாதிக்கப்பட்ட தரப்பின் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால், அந்தப் பஞ்சாயத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன் தான் என்ன? இங்கு மனோ ஒக்காம்போ கூறும் காரணம் பற்றி ஆராயலாம். ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரையில், அதன் கட்டமைப்பிற்குள் பலஸ்தீனத்தை ஒரு தேசமாக அங்கீகரிப்பதில் சிக்கல் இருப்பதென்னவோ உண்மையே. ஐ.நா. பொதுச்சபை பலஸ்தீன விடுதலை இயக்கத்தை பார்வையாளர் அந்தஸ்தில் வைத்திருக்கிறது. பலஸ்தீனத்தை அங்கத்துவ நாடாக அங்கீகரிக்க வேண்டுமா என்பது பாதுகாப்புச் சபையின் கையிலுள்ள முடிவாகும். பலஸ்தீன தேசத்தை இஸ்ரேலின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதும் அமெக்காவிற்கு அதில் வீட்டோ அதிகாரம் உண்டு.

ஆனால், உலகின் 140 இற்கு மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனத்தை சுதந்திர இராஜ்ஜியமாக அங்கீகத்துள்ளன. நிலையான சனத்தொகை, மக்களை நிர்வகிக்கும் அரசாங்கம், மற்றைய நாடுகளுடன் உறவுகளைப் பேணும் ஆற்றல் என்ற ரீதியில் ஒரு தேசத்திற்குரிய சகல அம்சங்களும் பலஸ்தீனத்திற்கு உண்டு. தீர்க்கமான நிலப்பரப்பு என்பது பிரச்சினைக்குரிய விடயமல்ல. ஒரு தேசம் பற்றிய வரைவிலக்கணத்தில், அதன் எல்லைகளை பேசித் தீர்க்க முடியுமெனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பார்த்தால், பலஸ்தீனத்தின் எல்லைகளே இஸ்ரேலின் எல்லைகளாகவும் அமைகின்றன.

சர்வதேச சமூகம் பலஸ்தீனத்தை ஒரு தேசமாகக் கருதிய போதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் அதற்குரிய அங்கீகாரம் கிடையாது.

அவ்வாறாயின், ஐக்கிய நாடுகள் என்பது சர்வதேச அமைப்பா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க டியாமல் போகின்றது அல்லவா? உண்மையில், பலஸ்தீனம் ஒரு தேசமல்ல என்பது, பலஸ்தீனத்தின் கோரிக்கையை தட்டிக்கழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஐ.சீ.சி. ன்வைக்கும் நொண்டிச் சாக்கே தவிர வேறொன்றும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு ஏகாதிபத்திய சக்திகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் பலரும் கூறியிருக்கிறார்கள். அத்தகைய ஏகாதிபத்திய சக்திகளின் துணையோடு கட்டவிழ்த்து விடப்படும் அராஜகங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஐ.நா. கட்டமைப்பிற்குள் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதையும், அராஜகம் புரிந்த தரப்புகள் அதற்குள் பாதுகாக்கப்படும் என்பதையும் ஐ.சீ.சீ. பலஸ்தீனம் சம்பந்தமான உதாரணம் தெளிவாகக் காட்டி நிற்கின்றது.

ஐ.சீ.சீ.யின் பிரதம வழக்குத் தொடுநர் ஏகாதிபத்திய சக்திகளின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய கைப்பாவையாகவே செயற்படுகிறார். அவர் இன்று பலஸ்தீன விவகாரத்தில் ஐ.சீ.சீ.யின் எந்தப் பிரமாணத்தைக் காட்டி விசாரணை குறித்த கோரிக்கையை நிராகத்தாரோ, லிபியாவின் விவகாரத்தில் அதே பிரமாணத்தை மீறியிருக்கிறார். இந்த மீறல் எத்தனை பேருக்குத் தெந்திருக்கிறது என்பது கேள்விக்குரிய விடயம்.

நேட்டோவின் ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்டது லிபியாவே. ஆனால், ஐ.சீ.சீ. யின் சார்பில் லிபியாவின் தலைவர் கேர்ணல் முவம்மர் கடாபி, அவரது மகன் சயிப் கடாபி, லிபியாவின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் அப்துல்லா அல் சனூஸி ஆகியோரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார், ஒக்காம்போ. லிபியா என்பது ரோமச் சட்டத்தில் கைச்சாத்திட்ட தேசம் அல்ல. எனவே, லிபியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் ஐ.சீ.சீ. யிற்குக் கிடையாது.

மேற்குலகம் நினைத்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் தாம் விரும்பிய எவரையும் நிறுத்த முடியும். இந்த நடைமுறையில் சட்டதிட்டங்கள் பொருட்டல்ல என்பதை நிரூபிப்பதற்கு ஐவரி கோஸ்ட் விவகாரம் சிறந்த உதாரணம். நவகாலனித்துவ ஆட்சிக்கு சவால் விடுக்கும் லோரன்ட் க்பாக்போவை சூசகமான முறையில் ஆட்சியில் இருந்து கவிழ்த்து, மேற்குலக சார்புடைய அலாசானே ஒட்டாரோவை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச் செய்த மேற்குலகம் இன்று க்பாக்போவை ஐ.சீ.சீ.யின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது.

இன்று உலகின் பல்வேறு பாகங்களில் அமெரிக்கப் படைகளும், நேட்டோ படையணிகளும் புரிந்து வரக்கூடிய அராஜகங்கள் பற்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. ஏனெனில், ரோமன் சட்டத்தில் அமெரிக்கா கைச்சாத்திட்டபோதிலும், அதன் பங்களாராக இருக்க விரும்பவில்லையென அமெக்கா அறிவித்திருக்கிறது. அமெக்காவின் வழியை இஸ்ரேலும் பின்பற்றிய இருக்கிறது. அதன் காரணமாக, ஏதோவொரு விதத்தில் காஸா ஆக்கிரமிப்பு பற்றி இஸ்ரேலுக்கு எதிராக ஐ.சீ.சீ. தீர்ப்பளித்தாலும் கூட, அதற்கு உடன்படக்கூடிய கட்டாயம் இஸ்ரேலுக்கு இல்லை.

இந்த நிலைமை புரியாமல் ஒடுக்கப்பட்ட பல சமூகங்கள் ஐக்கிய நாடுகள் சபையை தமது ஆபத்பாந்தவனாகவும், ஐ.சீ.சீ.யை நீதி தேவதையாகவும் பலத்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்கி வருகின்றன. இந்த நீதிமன்றத்தை உருவாக்கிய சக்திகள், அதனை தமது தேவைகளை நிறைவேற்றக் கூடிய கருவியாக பயன்படுத்தும் வகையிலேயே நியாயாதிக்க எல்லைகளை வகுத்திருக்கின்றன என்பதை அந்த சமூகங்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆதிக்க சக்திகளின் நலன்கள் மாறுகையில், தமக்கேற்ற விதத்தில் நல்லவனை கெட்டவனாகவும் கெட்டவனை நல்லவனாகவும் சித்தரிக்கக்கூடிய கட்டமைப்பு பற்றி நம்பிக்கை வைப்பது எங்ஙனம்?

- நன்றி வீரகேசரி
Admin
Admin
Admin
Admin

Posts : 693
Join date : 2011-11-21
Age : 12

http://asianweb.yours.tv

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum